tamilnadu

img

ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி : சுமார் 3000 தற்காலிக ஊழியர்கள் வேலை இழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் துறை நெருக்கடியின் ஒருபகுதியாக ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

மோடி அரசின் பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி போன்ற போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையால் தொழில் துறை கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (எம்.எஸ்.ஐ.எல்) நிறுவனத்தில் பணியாற்றிய, 3,000 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து  எம்.எஸ்.ஐ.எல் தலைவர் ஆர்.சி.பார்கவா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் இதுபற்றி கூறியிருப்பதாவது: தற்காலிக தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை, அதே நேரத்தில் நிரந்தர தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படவில்லை. இது வணிகத்தின் ஒரு பகுதிதான். தேவை அதிகரிக்கும் போது, ​​அதிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள், தேவை குறைந்தால் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள். 

தற்போது நிலவிவரும் விற்பனை சரிவு மற்றும் உற்பத்தி குறைப்பு, மாருதியில் பணி நீக்கத்திற்கு வழிவகுத்ததா என்ற கேள்விக்கு பார்கவா பதிலளிக்கையில். விற்பனை, சேவை காப்பீடு உரிமம் நிதி பாகங்கள் ஓட்டுநர்கள் பெட்ரோல் பம்புகள் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் ஆட்டோ மொபைல் துறை பாதிப்பை ஏற்படுத்தும். குறைவான வாகன விற்பனை பெரிய அளவில் வேலை  வாய்ப்புகளை பாதிக்கும் தற்போது "மாருதி சுசுகியில் சுமார் 3,000 தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.